மழை காலங்களில் ஏற்படும் சளி மற்றும் சுரத்திற்கு சில மூலிகை மருத்துவ குறிப்புகள் மற்றும் ஆலோசனைகள்.....



மழை காலங்களில் முடிந்தவரை வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருப்பது அவசியம். ஒருவரால், அவரின் எதிர்ப்பு சக்தியை பொறுத்து குளிரை தாங்க முடியும். ஆனால், குளிரால் தொற்றும் தொற்றுக்கிருமியை சாதாரணமாக ஒதுக்க முடியாது. கோடை காலத்தை விட, மழைக்காலம், குளிர் காலத்தில் தான் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவும் தொற்றும். அதனால் உஷாராகவே இருப்பது நல்லது.
‘சாட்’ வரும் பருவம்
ஆங்கிலத்தில் ‘சாட்’ எனப்படும் ‘சீசனல் அபெக்டிவ் டிசார்டர்’ என்ற பாதிப்பு, குளிர்காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது. வைட்டமின் ‘டி’ இல்லாததால் ஏற்படும் பருவ உடல் நிலை பாதிப்புகளை இது குறிக்கும்.


உடல் வலி, காய்ச்சல் உட்பட எல்லா பாதிப்பும் இதில் அடங்கும். வைட்டமின் “டி” சத்து, சில உணவு வகைகளில் தான் கிடைக்கிறது. குளிர்காலத்தில் இந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது முக்கியம்.
வைரஸ் – பாக்டீரியா
குளிர், மழைக்காலங்களில் எளிதில் பரவுவது வைரஸ் தொற்றுக்கிருமிகள்தான். கோடை காலத்தில் வருவதை விட, ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் போன்றவை குளிர் காலத்தில் யாருக்கும் வரத்தான் செய்யும். அதே சமயம், பாக்டீரியா தாக்குதல் என்பது, குளிர் காலத்தை விட கோடை காலத்தில்தான் பரவும். அதிலும், மிக அதிக வெப்பம் இருந்தால் தொற்றார் இரண்டுங்கெட்டானாக வெப்ப சூழ்நிலை இருந்தால் பாக்டீரியாக்கள், பிராணிகள், பறவைகளில் இருந்து தொற்றும்.
ஹாச்… ஹாச்…
ஹாச் என்று தும்முவதில் ஆரம்பித்து ஜலதோஷம் போன்ற பிரச்னைகள், இப்படிப்பட்ட சுற்றுச்சூழல் மாசுகளால்தான் ஏற்படுகிறது. அலர்ஜியால், சளி, இருமல், கண் எரிச்சல், மூக்கு ஒழுகுவது, தொண்டை கரகரப்பு போன்றவை ஏற்படும். இதனால், எந்த வேலையும் ஓடாது; தூக்கமும் வராது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்வதுதான் சரி.
சுடு தண்ணீர் குடிங்க…
எந்த ஒரு காலகட்டத்திலும் உடலுக்கு எல்லா வகையிலும் நல்லது பயக்கக்கூடியது குடிநீர்தான்.
மழைக்காலத்தில் பாதுகாப்பான நீராக குடிக்க சூடாக்கி குடிப்பதுதான் சரியானது. ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை குடிக்கலாம். ஆனால், பலரும் ஏதோ காரணத்தால் அதை கண்டுகொள்வதில்லை. இது தவறானது; தண்ணீர் குடித்து வந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. பளபளப்புக்கும் இது ஒரு முக்கிய காரணம்.
வீட்டுக்குள் நசநச…
மழை, குளிர் காலத்தில் இன்னொரு பிரச்னை, வீட்டில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதிக்கப்படுவதுதான். அளவுக்கு அதிகமான நபர்கள் புழங்கும் அறையில் இருந்து எளிதாக தொற்றுக்கிருமி பரவி விடும். பலவீனமானவர்களை அது உடனே தொற்றி விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படிப்பட்டவர்களுக்கும் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். அதனால் தான் ப்ளூ காய்ச்சல், ஜலதோஷம் சுலபமாக பரவுகிறது.
வைட்டமின் ‘டி’
வைட்டமின் ‘டி’ மிகவும் முக்கியமானது; அதுதான் தோல் பாகங்கள் பளபளப்புக்கு காரணமாகிறது. சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கும் இந்த வைட்டமின் ‘டி’ குளிர் காலத்தில் கிடைக்காது. தோலுக்கு பளபளப்பை தருவது மட்டுமின்றி, எலும்பு பாதுகாப்புக்கும் காரணமாகிறது. அதனால், பெண்களுக்குதான் இந்த வைட்டமின் இல்லாமல் பாதிப்புகள் வரும்.
சீசன் அலர்ஜி
சீசன் அலர்ஜி என்றால் என்ன தெரியுமா? மரம், காற்று, சிறிய பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றால் பரவும் கிருமிகள் மூலம் ஏற்படும் அலர்ஜி பாதிப்புகள். கோடைக் காலங்களில் தான் இதுபோன்ற அலர்ஜி மாசுகள் பாதிப்பை ஏற்படுத்தும்.
மரத்தில் இருந்து விழும் வித்தியாசமான துகள்கள், நாய் போன்ற பிராணிகளிடம் இருந்து பரவும் வாயு, படிமம், சுற்றுச்சூழல் மாசுகள் தான் இப்படிப்பட்ட அலர்ஜிகளுக்கு காரணம். மழை, குளிர் காலங்களில் இந்த பிரச்னை இருக்காது.
அதிகாலையில்….
வயதான சிலர் அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர்கள். அவர்கள் இந்த குளிர் காலத்தில் சற்று நேரம் கழித்து எழுவது நல்லது. அதுபோல, உடற்பயிற்சியை செய்வதையும் வெயில் சற்று வந்து வெதுவெதுப்பு ஏற்பட்டதும் செய்யலாம். குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது மிக முக்கியம். ஜலதோஷம், காய்ச்சல் வருவது பெரும்பாலும் அதனால்தான்.
சளி,மூக்கடைப்புக்கு ஒரு சில மருத்துவ குறிப்புகள்:-
சளிகட்டு நீங்க:
தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்தரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.
சளித்தொல்லை நீங்க:
1. ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டு புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித்தொல்லை நீங்கும்.
2. மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.
3. தூதுவளை செடியில் ரசம் வைத்து, சாப்பிட குணமாகும்.
4. அருகம்புல் சாறு பருகிவர சளித்தொல்லை நீங்கும். (2) காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூளைப் போட்டுக் கலக்கினால் நெஞ்சுச் சளி அகலும்.
சளிகபம் ஏற்படாமல் தடுக்க:
சுண்டைக்காயை வத்தல் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.
சளி, இருமல், இளைப்பு நோய்கள் வராமல் தடுக்க:
நத்தை சூரி விதைகளை வறுத்து பொடியாக்கி சம அளவு கல்கண்டு அல்லது பனங்கல் கண்டு சேர்த்து 5 கிராம் வீதம் காலை மாலை சாப்பிட, சளி இருமல் வராமல் தடுக்கலாம்.
மார்புசளி நீங்க:-
ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.
சளி மூக்கடைப்பு தீர:
கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.
மழைக்காலங்களில் வரும் சளி, இருமல் குணமாக:
முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.
ஜலதோஷம்:-
ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
தும்மல் நிற்க:
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.
இருமல், சளியுடன் வரும் இரத்தத்தை நிறுத்த:
ஆடாதோடா இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.

ஜலதோஷம்:
மாதுளம்பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.
ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க :
காய்ச்சல்விட்டதும் முதலில் தலைக்கு நீர்விட்டுகொள்பவர்கள் ஓமத்தை அரைத்து தலைக்கு தேய்த்தால் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.
மழைகாலங்களில் வரும் சுரத்திற்கு சில மருத்துவ குறிப்புகள்:-
மலேரியா சுரம் :
நிலவேம்பு, கண்டங்கத்திரி சமூலம், சுக்கு, சீரகம் ( கருசீரகம் ) சிதைத்து நல்ல நீரில் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.
சன்னி பாத சுரம் ( டைபாய்டு ) :
தூதுவேளை, கண்டங்கத்திரி, விசுனுகரந்தி, பற்பாடகம், ஆடாதோடை போன்ற ஐந்து மூலிகைகளை சிதைத்து நல்ல நீரில் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.
புளூச் சுரம்:
கண்டங்கத்திரி சமூலம், ஆடாதோடை, விசுனுகரந்தி, பற்பாடகம், சீரகம் ( கருசீரகம் ), சுக்கு சிதைத்து நல்ல நீரில் காய்ச்சி நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து காலை மாலை மூன்று நாள் குடிக்க குணமாகும்.
குழந்தைக்கு காய்ச்சல் சரியாக நிலவேம்பு, திப்பிலி, சுக்கு, சீந்தில் கொடி ஓர் நீறை அளவு எடுத்து ஒரு குவளைக்கு அரை குவளையாக வற்ற வைத்து கசாயம் செய்து கொடுக்க குணமாகும்.


Comments

  1. The most trusted casino site for Filipino players
    The Best Online Casino for Filipino Players ✓ A Trusted Casino Website · 24/7 Live Chat & More. kadangpintar Play on your worrione Phone 카지노 ✓ Online for Real Money ⏩ Get your Bonuses &

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மூலிகைககளும் அதன் மர்மங்களும்..... நாயுருவி.....