வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?

வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல்
துன்பப்படுகிறீர்களா?
 என்னவெல்லாமோ மருந்து
சாப்பிட்டு விட்டேன்; ஆங்கில மருத்துவரிடம் சென்று
ஊசியும் போட்டாச்சு! அப்படியும் இருமல் குறையவில்லை! என்ன செய்யவென்றே தெரியவில்லை!
என்று வருத்தப்படுகிறீர்களா?

கொஞ்சம் சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம்
(ஒவ்வொன்றும் 30கிராம் அளவில்) எடுத்துப் பொடித்துக்
கொள்ளுங்கள்.
இவற்றுடன் சின்ன துண்டு சுக்கு, மல்லி,
கருப்பட்டி(கருப்புக்கட்டி) அல்லது பனங்கற்கண்டு
ஆகியன சேர்த்துக்கொள்ளுங்கள்.
200 மி.லி. நீர் சேர்த்து, பாதியாகும் அளவு நன்றாகக்
கொதிக்க விடுங்கள். ஆறிய பின்னர் மூன்று மணி
நேரத்திற்கு ஒருமுறை குடியுங்கள்! வறட்டு இருமல்
திரும்பிப் பார்க்காமல் ஓடி விடும். இரவிலும் இருமல்
தொல்லை இல்லாமல் தூங்கலாம்.

அலுவலகத்தில் இருமிக்கொண்டே இருக்கிறேன்.
பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது
என்ன செய்வது? என்று கேட்பவர்கள், கொஞ்சம் காய்ந்த
திராட்சையை (உலர் திராட்சை) வாயில் ஒதுக்கிக்
கொள்ளுங்கள். இந்த உமிழ்நீர் இறங்க, இறங்க, இருமல்
வராது.
——————————-
குறிப்பு: சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம் – இ
வையெல்லாம் எங்கே கிடைக்கும் எனத் தயங்க வேண்டாம்.
நாட்டு மருந்துக் கடைகள் எல்லாவற்றிலும் இவை கிடைக்கும்.
வெண்புள்ளிகளுக்கு ஆயுர்வேத முறையில் உதவும் நான்கு உணவுகள்.
1.  தினமும் முப்பது கிராம் கொண்டைகடலையை இரவில் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தில் ஊறவைத்து காலையில் ஊறவைத்த தண்ணீரையும் கொண்டைகடலையையும் நன்றாக மென்று வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
இயலாதவர்கள் வேறு எந்த விதத்திலாவது வேகவைத்தோ அல்லது மற்றமுறையிலோ  தவறாமல் சாப்பிடுங்கள்.

2. தினமும் ஊறவைத்த 7, 8 பாதாம் கொட்டைகள்.
3. தினமும் சுரைக்காய் ஜீஸ் அல்லது உணவாக.
4. செம்பு பாத்திரத்தில் குறைந்தது எட்டு மணிநேரம் ஊற்றி வைத்த தண்ணீரை குடியுங்கள்.
புளிப்பு, சர்க்கரை அறவே நீக்க வேண்டும்.
படித்ததில் பிடித்தது.

Comments

Popular posts from this blog

மூலிகைககளும் அதன் மர்மங்களும்..... நாயுருவி.....