அரையாண்டு தேர்வுக்கு பின் சிறப்பு வகுப்பு கோவை பள்ளிகளுக்கு சி.இ்.ஓ., உத்தரவு*



*🔰🔰அரையாண்டு தேர்வுக்கு பின் சிறப்பு வகுப்பு கோவை பள்ளிகளுக்கு சி.இ்.ஓ., உத்தரவு*

*அரையாண்டு தேர்வு முடிவுகளை, பகுப்பாய்வு செய்து, பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு, சி.இ.ஓ., அய்யண்ணன் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்*

*பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு  வரும் 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. பொது வினாத்தாள் பாணியில் தேர்வு நடத்தப்படுகிறது. முழு பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் இடம்பெறுவதால், பாடவாரியாக மதிப்பெண்கள் பகுப்பாய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது*


*கடந்தாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில தரப்பட்டியலில் பத்தாம் இடத்தை கோவை மாவட்டம் பெற்றது. இதேபோல், பத்தாம் வகுப்பில், 95.86 சதவீத தேர்ச்சி பெற்றது. ஆனால், மாநில தரப்பட்டியலில், முதல் ஐந்து இடங்களை பிடிக்க முடியாத நிலையே தொடர்கிறது*

*மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், ஆசிரியர் காலிப்பணியிடங்கள், கோவையில் சொற்ப எண்ணிக்கையில் தான் உள்ளன. பள்ளிகளில் போதுமான கற்பித்தல் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.ஆனால், தேர்ச்சி முடிவுகளில் மட்டும் முன்னேற்றம் காணப்படவில்லை. இந்த குறையை களைய, அரையாண்டு தேர்வுக்குப் பின், சிறப்பு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன*

*தோல்வியை தழுவும் மாணவர்கள் மீது, சிறப்பு கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில்,'பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி, வீட்டிலும் குழந்தைகள் படிக்கின்றனரா என, மேற்பார்வையிட அறிவுறுத்த வேண்டும் என, சி.இ.ஓ., அய்யண்ணன் உத்தரவிட்டுள்ளார்' என்றனர்*

x

Comments

Popular posts from this blog

மூலிகைககளும் அதன் மர்மங்களும்..... நாயுருவி.....