புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் மரக்கன்று நடுகிறது கல்வித்துறை



*🔰🔰புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் மரக்கன்று நடுகிறது கல்வித்துறை*

*கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள, பள்ளி வளாகங்களில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் புது முயற்சியில், கோவை கல்வித்துறை களமிறங்க திட்டமிட்டுள்ளது*

*கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. தென்னை மரங்கள் முற்றிலும் சாய்ந்ததால், விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.அங்குள்ள பள்ளிகளில், கற்பித்தல் பணிகள் தற்போது நடக்கின்றன. பள்ளி வளாகத்துக்குள் இருந்த மரங்கள் அடியோடு சாய்ந்தன. எனவே, இப்பள்ளிகளில் மரக்கன்றுகள் நட, கோவை பள்ளிக்கல்வித்துறை திட்டுமிட்டுள்ளது*

*மாவட்ட சுற்றுச்சூழல் மையத்துடன், 'லெட்ஸ் தேங்க் பவுண்டேஷன்' என்ற நிறுவனம் இணைந்து, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவுள்ளன.முதல் கட்டமாக, நாளை 5 ஆயிரம் மரக்கன்றுகளுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல, கோவை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஏற்பாடுகள் நடக்கின்றன*

*மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஏற்கனவே நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன*

 *அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மரங்கள் சாய்ந்துள்ளன. எனவே, மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட, நான்கு வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு, 60 ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் இணைந்து, மரக்கன்று நட ஏற்பாடுகள் நடக்கின்றன,'' என்றார்*


Comments

Popular posts from this blog

மூலிகைககளும் அதன் மர்மங்களும்..... நாயுருவி.....