பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.12.18
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.12.18
தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினம்
திருக்குறள்
அதிகாரம்:
நடுவுநிலைமை
நடுவுநிலைமை
திருக்குறள்:116
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
நடுவொரீஇ அல்ல செயின்.
விளக்கம்:
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
பழமொழி
Blood is thicker than water
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்
இரண்டொழுக்க பண்புகள்
* விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற பிற உயிர்களை கல்லால் அடித்து கஷ்டப் படுத்த மாட்டேன்.
* சிறு உயிரினங்கள் அடிபட்டு கிடந்தால் அவைகளை
பெரியவர்கள் உதவியுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ அவற்றிற்கு மருந்து இடவோ முயற்சிப்பேன்.
பெரியவர்கள் உதவியுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ அவற்றிற்கு மருந்து இடவோ முயற்சிப்பேன்.
பொன்மொழி
தென்னை மரம் இளநீர் தருவது போல, நல்லவருக்குச் செய்த உதவி பலமடங்கு நன்மையைத் தரும்.
- ஔவையார்
பொதுஅறிவு
1.இந்தியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி எது?
சில்கா ஏரி (ஒரிசா)
2. இந்தியாவின் மிக நீளமான கால்வாய் எது?
இந்திராகாந்தி கால்வாய்
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
நாவல் பழம்
1. நாவல் முழுத்தாவரமும் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பொதுவாகத் துவர்ப்புச் சுவையே அதிகமாகும்.
2. நாவல் பட்டை நரம்புகளைப் பலப்படுத்தும்; தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.
3. நாவல் பழம் சிறுநீர் பெருக்கும்; பசியைத் தூண்டும்; நாக்கு மற்றும் ஈறுகளைச் சுத்தம் செய்யும், குடல், இரைப்பை, இதயத் தசைகளை வலுவாக்கும்.
English words and meaning
Unnatural செயற்கையான
Unison. பொருத்தம்
Unify. ஒன்றுபடுத்து
Undue.தகாத,அதிகமான
Unerring. நிச்சயான
Unison. பொருத்தம்
Unify. ஒன்றுபடுத்து
Undue.தகாத,அதிகமான
Unerring. நிச்சயான
அறிவியல் விந்தைகள்
நம் வாழ்வில் உபயோகிக்கும் பொருட்களின் வேதிப் பெயர்கள்
* உப்பு. - சோடியம் குளோரைடு
* சர்க்கரை - சுக்ரோஸ்
* ஆப்பச் சோடா /சோடா உப்பு - சோடியம் பை கார்பனேட்
* சுண்ணாம்பு - கால்சியம் ஆக்ஸைடு
* சாக்பீஸ் - கால்சியம் கார்பனேட்
* உப்பு. - சோடியம் குளோரைடு
* சர்க்கரை - சுக்ரோஸ்
* ஆப்பச் சோடா /சோடா உப்பு - சோடியம் பை கார்பனேட்
* சுண்ணாம்பு - கால்சியம் ஆக்ஸைடு
* சாக்பீஸ் - கால்சியம் கார்பனேட்
நீதிக்கதை
துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்..
பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்..
இளைஞன் ஒருவன் வந்தான் *_சாமி எனக்கு ஒரு சந்தேகம்.._* *உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்..*
*_ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..??_* என்று கேட்டான்..
*_ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..??_* என்று கேட்டான்..
துறவி அவனிடம் சொன்னார்..
*தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்..*
*தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்..*
_*ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை..*_
*_நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்.._*
*_நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்.._*
*தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு* _என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.._
_மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.._
_அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.._
_இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.._
_அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி.._
*தினமும் நீ சுத்தப் படுத்தினாலும்.. இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே.. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்..??* என்று கேட்டார்..
*தினமும் நீ சுத்தப் படுத்தினாலும்.. இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே.. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்..??* என்று கேட்டார்..
_அதற்கு அவன்,_
*என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க..?*
*என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க..?*
_*திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா..?*_
_இதை கேட்ட துறவி அப்போது சொன்னார்_ *தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில்..*
*நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன், அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழி படுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்..*
இளைஞன் கேட்டான்.. *சாமி இதற்கு நிரந்தர தீர்வு என்ன..?*
_அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார்,_
_பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்.._
*இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா..?*
*இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா..?*
*ஆகாது சாமி..* என்றான்..
துறவி கூறினார்.. *உன் கேள்விக்கு இதான் பதில்..*
*நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்..*
*இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்..* _*என்று மனிதன் தன்னிடம் இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,*_ *அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும்,*
*_அன்று வரை மனிதனை நன்னெறி படுத்த வேண்டும் என்றார்,”
இன்றைய செய்திகள்
* ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் நேற்று ராஜினாமா செய்தார்.
* அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
* மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் ஃபேஸ் ரீடிங் முறையை சென்னை அசோக்நகரில் உள்ள பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.
* ரஞ்சி கோப்பை: தமிழகத்துக்கு முதல் வெற்றி; 151 ரன்கள் வித்தியாசத்தில் கேரளத்தை வீழ்த்தியது.
Today's Headlines
Urjith Patel resigned Governor post of the Reserve Bank of India ,
The Agni-5 missile was successfully tested on Monday which successfully attack about 5,000-km-long
Tamil Nadu School Education Minister Chengottaiyan started the face reading method for students attendance at Ashok Nagar, Chennai.
India won the first Test against Australia by 31 runs. This is the first time that India has started the Test series with victory for the first time in Australia
Ranji Trophy: First victory for Tamil Nadu, defeated Kerala by 151 runs
Prepared by
Covai women ICT_போதிமரம்
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment