பெருமேடு என்பது சூரிய வழிபாட்டாளர்களின் சின்னம்- பேஸ்புக் விரிவான கட்டுரை -சிவக்குமார்

#சூரிய_வழிபாடு
மேடு – பெருமேடு – சோழர் – சோலாங்கி – சோலார் (Solar)  :
------------------------------------------------------------------
மிகநீளமான கட்டுரை, பொறுமையாகப் படிக்கவும்;

சமவெளியில் இருந்து பார்த்தால் தெரியும் உயர்வான இடத்தை  “ மேடு “ என்றும் தாழ்வான இடத்தை “ பள்ளம் “ என்று தமிழ் மொழியில் அழைப்பர். ஆழம் மிகுதியாக இருந்தால் “ பெரும் பள்ளம் “ என்றும் உயரம் மிகுதியாக இருந்தால் “ பெருமேடு “ என்றும் அழைப்பது தான் சரியானது.
இந்தப் பெருமேடு என்ற தூய தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் பிரமிடு (Pyramid)  என்று வழங்கப்படுகிறது. கதிரவனின் அயனத்தை செங்குத்தான ஒரு குச்சியை வைத்து அறிந்துகொள்ள முடியும் என்ற ஆதிகாலத் தொழில்நுட்பத்தின் நீட்சியே பெருமேடுகள்.அவ்விழுவன் குச்சியை விட மிகத் துல்லியமானது தான் பெருமேடு என்ற கட்டுமான வடிவம்.
உச்சி வேளையில் கதிரவனின் கதிர்கள் பெருமேட்டுக்கு 90 பாகையில் மேலிருந்து விழுவதால் அப்பெருமேட்டின் நிழல் அதன் மேலேயே விழுமே தவிர மண்ணில் விழாது!!
ஒரு சூரிய நாளின் உச்சிவேளையில் நடக்கும் இந்நிகழ்வு, ஒரு சூரிய ஆண்டின் உச்சியிலும் நடக்கும். (முதலாவது படத்தில் உள்ள நிழல்விழா எகிப்தியப் பெருமேடு.)
அதாவது சித்திரை மாதமும்,ஐப்பசி மாதமும் ஒரு சூரிய ஆண்டின் உச்ச  மற்றும் நீச்ச  மாதங்கள்.
சித்திரை நண்பகல் பனிரெண்டு மணிக்கும், ஐப்பசி நடுயாமம் பனிரெண்டு மணிக்கும் ஒப்பானது.
 “ வழிபடுதல் “ என்றால் பின்தொடர்வது என்றும் பொருள் கொள்ளலாம்.தலைவன் வழியில் நடப்பது என்றால் அவனைப் பின்தொடர்வது என்பது போல, சூரிய வழிபாடு என்றால் சூரியனின் அயனத்தை மிகத் துல்லியமாகப் பின்தொடர்வதாகும்.

செயற்கைக்கோள்கள் ஏவப்படும் முன் சூரிய அயனத்தைக் கணிக்க உதவும் ஒரு கருவியாக பெருமேடு என்ற வடிவியல் உருவம்தான் 1950 கள் வரை உலகெங்கிலும் பயன்பட்டது !!
உலகெங்கிலும் வாழ்ந்த  சூரிய வழிபாட்டாளர்கள் தவறாமல் இப்பெருமேட்டை தங்கள் நாடுகளில் கட்டினார்கள்.பெருமேடு எவ்வளவு உயரமோ அவ்வளவு துல்லியம் !!
எகிப்திய நாட்டுப் பெருமேடுகள், மாயன் நாட்டுப் படிப்பெருமேடுகள்(Step pyramid), சோழப் பேரரசின் பெரிய கோவில், சோலாங்கி அரசர்களின் சூரியக் கோவில் என அனைத்துமே சூரியனின் அயனத்தைக் கணிக்கவே கட்டப்பட்டன.
இன்றைய ஆங்கிலத்தில் வழங்கப்படும் சோலார் ( Solar ) என்ற சொல் சூரியனைக் குறிக்கும்.
இச்சொல் இந்தியத் துணைக்கண்டத்தில் காலம் காலமாய்ப் வழக்கத்தில் இருந்துள்ளது.
சூரிய வழிபாடு செய்யும் தமிழ் மண்ணின் ஒரு அரச குடும்பத்துக்கு “ சோழர் “ என்ற பெயரும், குசராத் மண்ணின் ஒரு அரச குடும்பத்துக்கு “ சோலாங்கி “ என்ற பெயர் இருந்தமையே இதற்குச் சான்று.
சோழர் - சோலாங்கி -  சோலார் ( Solar ) ஆகியவை ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள்.அந்த ஒரு பொருள் சூரிய வழிபாடு.
கி.பி. ஒன்பது முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை  சோழப் பேரரசுக் காலம் ஆகும்.இதன் உண்மையான பொருள் இதே காலத்தில் தான் சோழனும் தஞ்சையில் பெருமேடு கட்டினான், சோலாங்கி அரசனும் குசராத்தில் சூரியக் கோவில் கட்டினான், மாயன் அரசனும் படிப்பெருமேடு கட்டினான்.
சோழன் கட்டிய பெருமேடு எகிப்தியக் கட்டுமானத்தைப் போல அல்லாமல் பதிமூன்று படிகளைக் கொண்ட ஒரு அமைப்பாகும் (படம் 2 ).
சோலாங்கி அரசன் கட்டிய சூரியக் கோவிலிலும் படிப்பெருமேடுகளை ஒத்த  ஒரு கட்டுமானத்தைக் காணலாம்.(படம் 3)

உலகப் புகழ் பெற்ற மாயன் படிப்பெருமேடும் இவற்றை ஒத்த ஒரு வடிவத்தைக் கொண்டது.(படம் 4 )
தட்டையான முகப்பைக் கொண்ட பெருமேடுகளை விட படிகளைக் கொண்ட பெருமேடுகள் துல்லியமானவை.
மாயன் படிப்பெருமேட்டில் உள்ள நான்கு முகங்களில் தலா தொன்னூற்று ஓரு படிக்கட்டுகள் உள்ளன.மொத்தமாக 4 x 91 = 364 படிகளும், பெருமேட்டின் மேலே உள்ள ஒரு படியையும் சேர்த்து மொத்தம் 365 படிகள் உள்ளன.இது ஒரு சூரிய ஆண்டில் உள்ள 365 சூரிய நாட்களைக் குறிக்கும் !!
மேலும் சூரியன் உச்சமடையும் நாளில் சூரியனின் மாலை நிழல் அப்படிப்பெருமேட்டின் மேல் விழுந்து ஒரு பாம்பைப் போல காட்சியளிக்கும்.(படம்  5)
இதனை வைத்துத் தான் அப்பெருமேட்டைப் பயன்படுத்தியவர்கள் சூரிய ஆண்டின் உச்சத்தை மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்தனர்.

இது சோழனின் பெரிய கோவிலுக்கும் பொருந்தும்.உச்சி வேளையில் கோவில் நடையைச் சாத்தும் வழக்கம் அதனுள்ளே வாழ்ந்தவருக்கு இன்றும் உண்டு.கைக் கடிகாரம் இல்லாத அக்காலத்தில் உச்சி வேளையை எவ்வாறு கண்டு பிடித்தனர்??
படிப்பெருமேட்டின் நிழல் அதன் மேலேயே விழும்.மண்ணில் நிழல் தெரியாது.இது ஒரு சூரிய ஆண்டின் உச்சத்துக்கும் பொருந்தும்.
தஞ்சை பெரிய கோவிலின் நிழலே மண்ணில் விழாது, இது தான் தமிழன் பெருமை என்ற கட்டுக்கதையை எவனோ ஒருத்தன் பரப்பிவிட்டிருக்கிறான்.அதன் உண்மையான பொருள் மேலே உள்ள விளக்கம் தான்.
தை,சித்திரை,ஆடி,ஐப்பசி ஆகிய நாலும் சூரிய அயனத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
முதல் முதலில் இப்பெருங்கட்டுமானங்களை தமிழ் மண்ணுக்குள் கொண்டுவந்தவன் பல்லவனே ஆவான்.அவனுக்குப் பின் சோழன் தொடர்ந்தான்.பல்லவ வம்சாவழியினர் (வர்மன் என்ற பெயர் கொண்டோர் ) கைப்பற்றி ஆண்ட தென்கிழக்கு ஆசியா முழுவதும் படிப் பெருமேடுகள் கட்டப்பட்டன.இன்றும் அந்நாடுகளில் சித்திரை ஒன்று தான் ஆண்டுப்பிறப்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பாண்டிய மற்றும் சேர நாடுகளிலும் இதுபோன்ற பெருமேட்டுக் கட்டுமானங்கள் பக்தி இயக்கக் காலத்துக்குப் பின்தான் முளைத்தன.
பத்மநாதனின் பெருமேட்டு நுழைவாயில் சூரியஆண்டின் நீச்சதை இன்றும் மிகத் துல்லியமாகக் காட்டிவருகிறது (படம் 6 ).
அக்கோவிலில் 365 முழு தூண்களும், ஒரு கால் தூணும் உள்ளது. 365.25 நாட்கள் கொண்ட ஒரு சூரிய ஆண்டை இக்கோவிலில் வாழ்ந்தவர்களை விட இவ்வுலகில் எவனும் இவ்வளவு துல்லியமாகக் கணித்ததில்லை.இப்போது சொல்லுங்கள் திருவனந்தபுரக் கோவில் ஒரு வைணவக் கோவிலா ??
பொதுவாகவே சூரிய வழிபாடு செய்யும் குலங்களுக்கும்,சந்திர வழிபாடு செய்யும் குலங்களுக்கும் ஒத்துவராது.இருவரும் இரு துருவங்களைப் போல எதிரும் புதிருமாகவே இருப்பர்.
பத்தாம் நூற்றாண்டில் மிகப்பெரிய பேரரசை நிறுவத்துடித்த சோழர்கள் தென்னிந்தியா,கிழக்கிந்தியா,பர்மா,கங்கை,கடாரம் என கைப்பற்றினார்களே , ஏன் மேற்கே குசராத் நோக்கிச் செல்லவில்லை என்ற புதிருக்கு விடை கிடைத்துள்ளது. சோழனும்,சோலாங்கியும் சூரிய வழிபாட்டாளர்கள் என்பதால் இருவரும் போரிட்டுக்கொள்ளவில்லை.
அனால் சோலாங்கி நாட்டின் மீதும் அந்நாட்டின் சுரண்டல் நிறுவனங்கள் ( அதாங்க கோவில்கள் !! ) மீதும் படையெடுத்தவன் யார் தெரியுமா ??
சந்திர வழிபாடு செய்யும் முகமது கசினி !!
கிழக்கு இந்தயக் கம்பனியும், கிருத்துவப் பாதிரியார்களும் நினைத்திருந்தால் தமிழகக் கோவில்களை சுக்கு நூறாக இடித்துத் தரைமட்டம் ஆக்கியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை.ஏன்??
காரணம் அவை பொதுமக்கள் பயன்படுத்திய வழிபாட்டு இடங்களே கிடையாது !! பொது மக்கள் வழிபாடு செய்த குல தெய்வக் கோவில்களில் நடந்த சடங்குகளை மட்டுமே பாதிரிமார்கள் கிண்டல் கேலி செய்தார்கள் என்பது நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று.
ஆங்கிலேயனும் சூரிய நாள்காட்டியைப் பயன்படுத்தியவன் ஆவான். அவனுக்கும் சூரிய அயனத்தின் முக்கியமான நாட்கள் தேவைப்பட்டன.
அப்படி இருக்கையில் அவன் ஏன் இப்பெருமேடுகளை இடிக்கப்போகிறான் ??
அவற்றின் உள்ளே இருந்த பார்ப்பான் ஆங்கிலேயனுக்கு உதவியதால் தானே பார்ப்பானுக்கு சொகுசான அரசுப்பணி கொடுத்தான் ஆங்கிலேயன் !!
செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சூரியனின் அயனத்தை நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பின்பற்றத்தொடங்கிய பின்னர் தான் இக்கோவில்கள் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டன என்பதை நினைவில் கொள்ளவும்.
நான் மேலே கூறிய அனைத்தும் “ முடி வரலாறு “ தானே தவிர “ குடி வரலாறு “ அல்ல.
சோழநாட்டுக் குடிமக்களின் குலதெய்வக் கோவில்களில் உள்ள  " சூலம் "  சொல்லும் அவர்கள் சந்திர வழிபாட்டாளர்கள் என்று. இது மற்ற நாடுகளுக்கும் பொருந்தும்.
எகிப்தில் உள்ள பெருமேடுகளில் சில அரசர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் என்பதற்காக அவ்வடிவங்களை பெரும் + இடு = பெருமிடு என்று சொல்வது தவறான ஒரு கருத்து.
சாதகம் பார்ப்போர் பயன்படுத்தும் பனிரெண்டு கட்டங்களில் சித்திரை மாதமும், மேட இராசியும்  ஒரே கட்டத்தில் பொருந்தி வரும்.இது போதாதா பெருமேடு என்பது சூரிய வழிபாட்டாளர்களின் சின்னம் என்று ??
மேலும் தஞ்சை பெரிய கோவிலைத் தவிர மேலே சொல்லப்பட்ட எந்த ஒரு பெருமேட்டிலும் இன்று பொதுமக்கள் சாமி கும்பிடுவது கிடையாது.
இதில் இருந்து என்ன தெரிகிறது ?? அவ்விடங்களுக்கு பொது மக்கள் செல்லும் வழக்கம் இருந்ததேயில்லை.
அனால் தமிழ் மண்ணில் மட்டும் செயற்கையாக ஒரு ஆலய நுழைவுப் போராட்டம் சென்ற நூற்றாண்டு நடத்தப்பட்டு,  இன்று இப்பெருமேடுகளின் உண்மையான வரலாறு பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்பட்டுவிட்டது.
தொடரும்.......
Sivakumar

Comments

Popular posts from this blog

மூலிகைககளும் அதன் மர்மங்களும்..... நாயுருவி.....