Posts

Showing posts from December, 2018
Image
திருவண்ணாமலையை பற்றி  ஒரு அபூர்வ தகவல். சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும். ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான விவரம்...  முகலாயர்கள் காலத்தில் நம் அண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது. அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான விரேகிய முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார்.   நந்தி கால்மாற்றிய வரலாறு முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர். அரசன் நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்? அதற்கு அந்த ஐவர் எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம் என்றனர்.  அதற்கு அரசன் உம் சிவன் இந்த அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து சேர்த்து வைத்து உயிர் கொட...
Image
*கும்பகோணம் கோயிகள் 62-ஐ* *தரிசிக்க வாருங்கள்.* *வாழ்வில் வசந்தம் வீசும்.* *மன நிம்மதி கிடைக்கும்.* I.   *திருக்கொட்டையூர் முதல் திருவைக்காவூர் வரை*: 1.  திருக்கொட்டையூர் - *கோடீஸ்வரர் திருக்கோயில்* (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)     கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது 2.  திருவலஞ்சுழி - *கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில்* (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)    திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 3.  சுவாமிமலை - *சுவாமிநாதசுவாமி திருக்கோயில்* *(முருகரின் நான்காவது படை வீடு)*     திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 4.  புள்ளபூதங்குடி – *வல்வில்ராமன் திருக்கோயில்* *(திவ்ய தேசம்)*  சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 5.  ஆதனூர் - *ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்* *(திவ்ய தேசம்)*     புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. 6.  இன்னம்பூர் - *எழுத்தறிநாதர் திருக்கோவில்* (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்) ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 7....

தமிழுலகம் மறக்கக் கூடாத அறிஞர். மயிலை சீனி. வேங்கடசாமி. தமிழுக்கு செய்த தொண்டுகள்.....

Image
மறக்க முடியுமா? - மயிலை சீனி. வேங்கடசாமி. தமிழுலகம் மறக்கக் கூடாத அறிஞர்களுள் மயிலையாரும் ஒருவர். மயிலை சீனி. வேங்கடசாமி (பி. டிசம்பர் 16, 1900 - ஜூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். வாழ்க்கைக் குறிப்பு வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். தனது விடுமுறை நாட்களி...

தெருவோரக்கடைக்காரரின் தொண்டு- உண்மைக்கதை

Image
#ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. #சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு #ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”. திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில் இருந்த  ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்). #அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”. #கண்டிப்பாக..... சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம். முதல் நன்மை. #சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். ( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களு...

பெருமேடு என்பது சூரிய வழிபாட்டாளர்களின் சின்னம்- பேஸ்புக் விரிவான கட்டுரை -சிவக்குமார்

Image
# சூரிய_வழிபாடு மேடு – பெருமேடு – சோழர் – சோலாங்கி – சோலார் (Solar)  : ------------------------------------------------------------------ மிகநீளமான கட்டுரை, பொறுமையாகப் படிக்கவும்; சமவெளியில் இருந்து பார்த்தால் தெரியும் உயர்வான இடத்தை  “ மேடு “ என்றும் தாழ்வான இடத்தை “ பள்ளம் “ என்று தமிழ் மொழியில் அழைப்பர். ஆழம் மிகுதியாக இருந்தால் “ பெரும் பள்ளம் “ என்றும் உயரம் மிகுதியாக இருந்தால் “ பெருமேடு “ என்றும் அழைப்பது தான் சரியானது. இந்தப் பெருமேடு என்ற தூய தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் பிரமிடு (Pyramid)  என்று வழங்கப்படுகிறது. கதிரவனின் அயனத்தை செங்குத்தான ஒரு குச்சியை வைத்து அறிந்துகொள்ள முடியும் என்ற ஆதிகாலத் தொழில்நுட்பத்தின் நீட்சியே பெருமேடுகள்.அவ்விழுவன் குச்சியை விட மிகத் துல்லியமானது தான் பெருமேடு என்ற கட்டுமான வடிவம். உச்சி வேளையில் கதிரவனின் கதிர்கள் பெருமேட்டுக்கு 90 பாகையில் மேலிருந்து விழுவதால் அப்பெருமேட்டின் நிழல் அதன் மேலேயே விழுமே தவிர மண்ணில் விழாது!! ஒரு சூரிய நாளின் உச்சிவேளையில் நடக்கும் இந்நிகழ்வு, ஒரு சூரிய ஆண்டின் உச்சியிலும் நடக்கும். (முதலாவது படத்தி...

சிந்தனைக் கதை *அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் விதியையும் வெல்லலாம்*

Image
சிந்தனைக் கதை!!!!!! *அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் விதியையும் வெல்லலாம்* இரண்டு குறுநில மன்னர்களுக்கிடையே ஒரு முறை போர் மூளும் சூழல் ஏற்பட்ட து. அவர்கள் எதை செய்வதானாலும் அவர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு குருவிடம் சென்று ஆலோசனை கேட்டு அதன் பிறகே செய்வார்கள். அந்த குருவோ சாதாரணமானவர் அல்ல. மாபெரும் ஞானி பல ஆண்டுகள் தவம் செய்து பல சித்திகள் கை வரப்பெற்றவர். இறைவனிடமே நேரடியாக பேசும் ஆற்றல் பெற்றவர். தனது சக்திகளை கொண்டு நல்ல காரியங்கள் பல செய்து வந்தார். மக்களுக்கு அவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை பற்றிச் சொல்லி அவர்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வந்தார். இரண்டு குறுநில மன்னர்களில் முதலமானவன் படைபலம் சற்று அதிகம் கொண்டவன். திறமைசாலி. ஒரு நாள் குருவை சந்திக்க வந்தான். “குருவே, நான் என் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய வேளை வந்து விட்டது. போரில் எனக்கு வெற்றி கிடைக்குமா இல்லையா என்று உங்கள் யோக சக்தியை வைத்து கடவுளிடம் கேட்டு சொல்லுங்களேன்…” என்றான். குருவும் கண்களை சிறிது நேரம் மூடிக் கொண்டு தியானம் செய்த பின்னர், “இந்தப் போரில் நீ தான் வெற்றி பெறுவாய்!!” என்றார். சந்தோஷம...

மாமிசம் என்னும் விஷம்......மாமிசம் உண்பதால் ஏற்படும் தீமைகள்...

Image
*மகா + விஷம் = மாமிசம்* இது மோகத்தையும் கோபத்தையும் தூண்டும். ஒவ்வொரு மிருகத்திற்கும் அதுவாக தேர்ந்தெடுத்த உணவிருக்கும். நீங்கள் ஒரு மாட்டைப் பிடித்துத் தோட்டத்தில் விட்டால், அது ஒரு குறிப்பிட்ட புல்லைத்தான் தின்னும். அவை எதையும் எல்லாவற்றையும் தின்று கொண்டே இருக்காது. *அவை தேர்ந்தெடுக்கும்.* அவைகளுக்கு உணவைப் பற்றி சில குறிப்பிட்ட உணர்வுகள் இருக்கும். ஆனால் மனிதனுக்கு உணவைப் பற்றி உணர்வே கிடையாது. மனிதன் அந்த உணர்வை முழுமையாகத் தொலைத்துவிட்டான். சில இடங்களில் அவர்கள் எறும்பை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில், பாம்புகளை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் நாய்களை சாப்பிடுகிறார்கள். மனிதன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான். அவன் முற்றிலுமாகக் குழம்பிப் போயிருக்கிறான். மனிதனுக்குப் பைத்தியம். அவன் உடலோடு என்ன எதிரொலிக்கிறது என்பது தெரியாது. மனிதன் இயற்கையிலேயே ஒரு சைவமாகத்தான் இருக்க வேண்டும். காரணம் முழு உடலுமே சைவத்திற்காக உருவாக்கப்பட்டதுதான். ஒவ்வொரு விஞ்ஞானியும் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்கிறார்கள். மனித உடலின் முழு அமைப்புமே அவன் அசைவமாக இருக்கக்கூடாது என்பதைத்தான் காட்டுகிறது. மனிதன் குர...

வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?

Image
வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?  என்னவெல்லாமோ மருந்து சாப்பிட்டு விட்டேன்; ஆங்கில மருத்துவரிடம் சென்று ஊசியும் போட்டாச்சு! அப்படியும் இருமல் குறையவில்லை! என்ன செய்யவென்றே தெரியவில்லை! என்று வருத்தப்படுகிறீர்களா? கொஞ்சம் சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம் (ஒவ்வொன்றும் 30கிராம் அளவில்) எடுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் சின்ன துண்டு சுக்கு, மல்லி, கருப்பட்டி(கருப்புக்கட்டி) அல்லது பனங்கற்கண்டு ஆகியன சேர்த்துக்கொள்ளுங்கள். 200 மி.லி. நீர் சேர்த்து, பாதியாகும் அளவு நன்றாகக் கொதிக்க விடுங்கள். ஆறிய பின்னர் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை குடியுங்கள்! வறட்டு இருமல் திரும்பிப் பார்க்காமல் ஓடி விடும். இரவிலும் இருமல் தொல்லை இல்லாமல் தூங்கலாம். அலுவலகத்தில் இருமிக்கொண்டே இருக்கிறேன். பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது என்ன செய்வது? என்று கேட்பவர்கள், கொஞ்சம் காய்ந்த திராட்சையை (உலர் திராட்சை) வாயில் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இந்த உமிழ்நீர் இறங்க, இறங்க, இருமல் வராது. ——————————- குறிப்பு: சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம் – இ வையெல்...

சில எளிமையான சித்த மருத்துவக் குறிப்புகள்

Image
சில எளிமையான சித்த மருத்துவக் குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும். வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும். வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.  ந...

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. விரிவான கட்டுரை

Image
================================================ சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.  அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது. ================================================= 1. தலை = 307 2. வாய் =18 3. மூக்கு =27 4. காது =56 5. கண்= 96 6. பிடரி =10 7. கன்னம் =32 8. கண்டம்= 6 9. உந்தி =108 10. கைகடம் =130 11. குதம் =101 12. தொடை= 91 13. முழங்கால் கெண்டை =47 14. இடை =105 15. இதயம்= 106 16. முதுகு= 52 17. உள்ளங்கால்= 31 18. புறங்கால்= 25 19. உடல்உறுப்பு எங்கும்= 3100 ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம். ============================================== உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது. கிரும...

டல்லாஸ் மக்களின் பொன்னான மனசும், 'மொய் விருந்தும்'

Image
டல்லாஸ் மக்களின் பொன்னான மனசும், 'மொய் விருந்தும்' பதிவு செய்த நாள்: டிச 14,2018  ' உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது' என்பது இப்போது உலகெங்கும் நிரூபணமாகி வருகிறது. நம் தமிழ் மக்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? முன்பெல்லாம் எதிரே சந்தித்தால், தங்கள் சொந்தக் கதைகள் தான் பேசப்படும். ஆனால் இப்போது பொதுநலம் தான் அதிகம் பேசப்படுகிறது. அதுவும் இந்த 'கஜா' புயலின் கோரத்தாண்டவத்திற்குப் பிறகு, எப்போதும் நம் தமிழ்நாட்டு மக்களின் ஞாபகங்கள் அதிகம். வெறும் பேச்சோடு அல்லாமல் பல நல்ல செயல்களில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். அப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் நிரம்பிய டல்லாஸில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் சீரமைப்பிற்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 8000 அமெரிக்கா டாலர்கள் கொடுக்க முன்வந்துள்ளார்கள் ! இதன் மூலம் விவசாய நிலங்களில் வீழ்ந்து கிடைக்கும் மரக்கன்றுகளை அகற்றி, விவசாயிகளுக்கு தென்னை, மா, பலா, எலுமிச்சை கன்றுகளை வழங்கிட முன்வந்துள்ளனர். இத்தொகையை 'தமிழ்நாடு பவுண்டேசன் டாலஸ்' மூலம், தமிழ்நாட்டில் 'கல்...

சுற்றுச் சூழல் விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தி வரும் அரசுப் பள்ளி ஆசிரியர் ..

Image
சுற்றுச் சூழல் விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தி வரும்  அரசுப் பள்ளி ஆசிரியர் .. அன்னவாசல்,டிச.14 : சுற்றுச் சூழல் விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் மாங்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் சரவணனுக்கு உருவம்பட்டி பள்ளி மாணவர்கள்  உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீ.சரவணன் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவர்களிடம் இயற்கை வழி வாழ்வு முறை குறித்தும் ,பிளாஸ்டிக் கேரிப்பைக்கு பதிலாக மஞ்சள் பையை உபயோகிக்க வலியுறுத்தியும்,மரங்களை நட்டு பராமரிப்பது குறித்தும் அரசு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்..அவ்வாறு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் பொழுது  பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும்,மஞ்சள் பை வழங்கியும் ,மாணவர்களிடம் விழிப்புணர்வு சொற்பொழிவு ஆற்றியும்,துண்டு பிரசுங்கள் வழங்கியும் மாணவர்களை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்தும் வருகிறார். இது குறித்து ஆசிரியர் சீ.சரவணன் கூறியதாவது: கடந்த ஜீன் 3...

மூலிகைகளும் அதன் மர்மங்களும்..... பூரான், பாம்பு போன்ற விஷப்பூச்சி தாக்குதலுக்கு மருந்தாக பயன்படும் தும்பை

Image
தாவரப்பெயர் : ( LEUCAS ASPERA ) லியுக்கஸ் அஸ்பெரா குடும்பம் : LABIATACEAE வளரியல்புகள் தும்பை (Leucas Aspera) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. இலங்கையின் சில ஊர்களிற் தும்பங்காயைக் கறி சமைத்து உண்பர். தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் . பெருவாரியாக இது விளைந்து கிடந்த இடங்களில் இப்போது பார்த்தீனியம் இடம் பிடித்து விட்டது. தும்பைச் செடி வகைகள் தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு. மருத்துவ குணங்கள் தும்பையை ஆயுர்வேதத்தில் இதனை துரோன புஸ்பி என்று சொல்வோம்.குணமாக்கும் நோய்களில் -விஷம ஜ்வரம்.அக்னி மாந்த்யம் என்னும் பசி இன்மைக்கு ,காமாலை என்னும் மஞ்சள் காமாலைக்கு பக்ஷாகாதம் என்னும் பக்கவாத...